deepamnews
இலங்கை

செனல் 4 காணொளி குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மைத்ரி கோரிக்கை.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெற்றியடையவில்லை எனவும் செனல் 4 வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய செனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை முற்றாக எம்மால் நிராகரித்துவிட முடியாது.

இருப்பினும் இந்த காணொளி முழுமையாக, உண்மை, என கூறவும் முடியாது.

எனினும் செனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சுயாதீனமான, சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.இதுவே சிறந்தது.

விசாரணை நடத்துமாறும், உண்மையை வெளிக்கொண்டுவருமாறும் இங்குள்ளவர்களுக்கு கூறினாலும் அது சரிவராது.

அத்துடன், இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெற்றியடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய நாடுகள் சபையும் செனல் 4 காணொளி தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துமாறு கூறியுள்ளது.

எனவே ஐக்கிய நாடுகள் சபை கூறுவது போன்று செனல் 4 வெளிக்கொணர்வு தொடர்பில் சர்வதேச விசாரணையை மேற்கொள்வது சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாபெரும் கைத்தொழில் கண்காட்சி!

videodeepam

மின் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை – கையை விரித்தார் ரணில்

videodeepam

இறைச்சிக்காக விலங்குகளை வேறு நாடுகளுக்கு அனுப்பும் திட்டத்திற்கு அரசாங்கம் உடன்படவில்லை – பந்துல குணவர்தன

videodeepam