deepamnews
சர்வதேசம்

சீனாவின் பட்டு பாதை திட்டத்திலிருந்து இத்தாலி விலகுவதற்கு தீர்மானம்!

கடல் வழி மார்க்கமாக ஆசியா ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைக்கும் ‘பெல்ட் அன்ட் ரோடு’ என்ற சீனாவின் பட்டு பாதை திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜி 7 அமைப்பில் இருந்த இத்தாலி மட்டும் கடந்த 2004 ஆம் ஆண்டு சீனாவின் இந்த பட்டு பாதை திட்டத்தில் இணைந்து இருந்தது.

ஆனால் இதனை தொடர்ந்து சீனாவின் இந்த திட்டம் தங்கள் நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி இந்த மாத தொடக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதைப் போல இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி சீனாவின் பட்டு பாதை திட்டத்தில் இணைந்தது மிகப்பெரிய தவறு என்று அவ்வப்போது தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி சீன பிரதமர் லி கியாங்-ஐ சந்தித்து இந்த  திட்டத்திலிருந்து இத்தாலி விலக முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சீன பிரதமர் லி கியாங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் சீன பிரதமர் லி கியாங் வேண்டுகோளை இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது.’

 ‘பெல்ட் அன்ட் ரோடு’ என்ற சீனாவின் பட்டு பாதை திட்டத்தின் அடுத்த கூட்டம் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முடிவு செய்து இருப்பது சீன ஜனாதிபதி  ஜி ஜின்பிங்குக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.  

Related posts

ஈரானில் பயங்கரவாத தாக்குதல் – பாதுகாப்புப் படையினர் நால்வர் பலி

videodeepam

கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் தீப்பரவல் – 3 பேரை காணவில்லை

videodeepam

துபாயில் புர்ஜ் கலிபா அருகிலிருந்த 35 மாடி கட்டடம் தீக்கிரை

videodeepam