deepamnews
இலங்கை

தலைவர் பிரபாகரனை போலிக் காணொலி மூலம் கொச்சைப்படுத்தாதீர்! – மனோ எம்.பி. கவலையுடன் தெரிவிப்பு

“எதிரியே பாராட்டிப் புகழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போலிக் காணொலிகளை வெளியிட்டுக் கேவலப்படுத்துவது எமக்கு மனக் கவலையளிக்கின்றது.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவரின் மகள் துவாரகா எனும் பெயரில் மாவீரர் தினத்தில் போலிக் காணொலியொன்று வெளியானமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கூட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

பிரபாகரனுடன் தனக்குக் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும் அவர் ஒரு நேர்மையான போராளி எனக் கமல் குணரத்ன எழுதிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக எதிரியே பாராட்டிப் புகழும் தலைவரைப் போலிக் காணொலிகளை வெளியிடுவதன் மூலம் கேவலப்படுத்துவது எமக்கு மனக் கவலையளிக்கின்றது.” – என்றார்.

Related posts

கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் நுவரெலியாவில் விபத்து – 7 பேர் பலி, 57 பேர் காயம்

videodeepam

4 குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை.

videodeepam

தேர்தல் ஊடாக எவ்வித மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு

videodeepam