deepamnews
இலங்கை

யாழில் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் காய்ச்சலும், வாந்தியும் ஏற்பட்ட நிலையில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது வியாழகிழமை அன்று (25.01.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் என்ற 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதன்படி அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அரசாங்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுகின்றது – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

videodeepam

எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீட்டு வழக்கை தாமதப்படுத்த 25 கோடி லஞ்சம் – விஜேதாச ராஜபக்ஷ 

videodeepam

தொடரும் சீரற்ற வானிலை – யாழ்ப்பாணத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

videodeepam