deepamnews
இலங்கை

கெஹலியவுக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியர்கள்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவர் சுகாதார அமைச்சராக இருந்த போது இறக்குமதி செய்த மருந்துகளே சிறைச்சாலை வைத்தியசாலையில் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுடனான விசேட கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அதிக விலைக்கு வழங்கிய குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாணவர்கள் பல்துறை சார்ந்தவர்களாக உருவாக வேண்டும் – அமைச்சின் செயலாளர் மகேசன் யாழில் தெரிவிப்பு

videodeepam

மீண்டெழும் இலங்கை – அதிக உணவுப் பணவீக்க நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கம்

videodeepam

துபாயில் படுகொலை செய்யப்பட்ட யாழ். இளைஞன் – வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்

videodeepam