deepamnews
இலங்கை

ரயிலில் சிக்கிய – தந்தை, மகள் பலி – தாய் படுகாயம்..!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சற்றுமுன்னர் புகையிரதத்துடன் ஹயஸ் வானகம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்ததுடன் தாய் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச்சென்ற புகையிரதத்துடன் இணுவில் பகுதியில் ஹயஸ் வாகனம் மோதியதில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

இணுவில் பகுதியை சேரந்த 32 வயதுடைய சயந்தன் , 22 வயதுடைய மனைவி சயந்தன் பிரியங்கா, 6மாதங்களான அவர்களின் பெண்குழந்தை ஆகியோர் சென்ற வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்ததுடன், தாய் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

Related posts

இலங்கைக்கு சுற்றுலா வந்த பயணியிடம் பணம் கொள்ளையடிக்கும் உணவகங்கள்.

videodeepam

நாணய நிதியத்தின் உதவியை விரைவுபடுத்துவதற்கு  சர்வதேச உதவியை நாடும் இலங்கை – அலி சப்ரி முக்கிய சந்திப்பு

videodeepam

குரங்குகளை பிடிப்பதற்காக விசேட பயிற்சி – விவசாய அமைச்சு அறிவிப்பு  

videodeepam