deepamnews
இலங்கை

நாணய நிதியத்தின் உதவியை விரைவுபடுத்துவதற்கு  சர்வதேச உதவியை நாடும் இலங்கை – அலி சப்ரி முக்கிய சந்திப்பு

நிதி மற்றும் உதவி தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் பதிலை விரைவுபடுத்துவதற்கு இலங்கை சர்வதேச ஆதரவை நாடியுள்ளது.

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, வெளியுறவு அமைச்சில் பாரிஸ் கிளப் உறுப்பினர் நாடுகளின் தூதரகத் தலைவர்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு விளக்கமளித்தபோதே இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சமரதுங்க ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, இதன்போது இலங்கை தரப்பு, இராஜதந்திரிகளிடம் விளக்கமளித்தது.

நிதி மற்றும் ஆதரவு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் விரைவான பதிலுக்காக இந்த முக்கியமான தருணத்தில் இலங்கை பிரதிநிதிகள் தமது வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.

Related posts

சேற்றில் புதைந்து உயிருக்கு போராடும் யானையை மீட்கும் பணிகள் தீவிரம்!

videodeepam

மாவட்ட செயலகத்தில் வேலை செய்வதாக கூறி பெண் ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்த முயற்சித்த பொலிஸ் அதிகாரி.

videodeepam

யாழில் சூரிய சக்தியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தில் இயங்கும் இயந்திரபடகு

videodeepam