அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக கள்வர்கள் அற்ற கூட்டணியொன்றை அமைத்தால் நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
பொதுக் கூட்டணியொன்று அமைய வாய்ப்புள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றனவே என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “சட்டப்பூர்வமாக ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது” – என்றார் சந்திரிகா அம்மையார்.