deepamnews
இலங்கை

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் உயிரிழப்பு.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் பளை நகர பகுதியில் இருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் புலோப்பளையில் இருந்து பளை நகரப்பகுதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குணம் கணேசன் வயது 20 என்பவரே பலியாகியுள்ளார்.

குறித்த இளைஞன் பளையை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

விடுதலையை வலியுறுத்தி கர்நாடகாவில் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இலங்கையர்கள்

videodeepam

கொழும்பில் பலப்படுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கம்

videodeepam

இந்தியாவில் இருந்து முட்டைகளை  இறக்குமதி செய்வதில் தாமதம் –  ஆசிறி வலிசுந்தர இந்தியா பயணம்

videodeepam