deepamnews
இலங்கை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கை!

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினரை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ ஆகியோருக்கு தமிழ் மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாக மாற்றுவதற்காக தாம் வெளிப்படையாக செயற்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ்ப்பாண ஆலயத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்.

videodeepam

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் தனி பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படும் – டக்ளஸ் உறுதி!

videodeepam

யாழ்ப்பாணத்தில் திடீரென வந்த புத்தர் சிலை!

videodeepam