deepamnews
இலங்கை

யாழில் வீதியில் சென்றபோது தீப்பிடித்த வாகனம்

யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்று திடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது.

மாவிட்டபுரம் பகுதியில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (21) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனம் திடீரென தீ பிடித்த நிலையில் அதனை அணைக்க பலரும் போராடிய நிலையில், காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து தீயணைப்பு வாகனம் அழைக்கப்பட்டும் தீயினை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வாகனம் முற்றாக எரிந்துள்ளது.

வாகனத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே வாகனம் தீ பிடித்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஒக்டோபர் மாதத்துக்குள் மின்சார சபையை மறுசீரமைக்க உத்தேசம் –  இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தகவல்

videodeepam

நான்கு அரச நிறுவனங்கள் தொடர்பில் விசாரணை:  கோப் குழு அழைப்பு

videodeepam

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். கலாச்சார மத்திய நிலையத்தில் கலை நிகழ்கள்!

videodeepam