deepamnews
இலங்கை

லிட்ரோ விலை தொடர்பில் மகிழ்ச்சித் தகவல்!

நவம்பரில் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக லிட்ரோ கேஸ் லங்கா நேற்று (24) தெரிவித்துள்ளது.

இது குறித்து லிட்ரோ கேஸ் லங்காவின் தலைவர் முதித பீரிஸ் கூறுகையில்,

“லிட்ரோ கேஸ் செப்டம்பரில் திறைசேரிக்கு 6.5 பில்லியன் ரூபாவை திருப்பிச் செலுத்தியுள்ளது. ஒக்டோபரில் 7.5 பில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

உலக எரிவாயு விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதால், நவம்பர் முதல் வாரத்தில் எரிவாயு விலை மேலும் குறையும் வாய்ப்பு இருப்பதாக முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ கேஸ் லங்கா தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை 2022 ஒக்டோபர் 05 அன்று கடைசியாகக் குறைத்தது. அந்தவகையில் தற்போது 12.5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் ரூ. 4280, 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ. 1720, மற்றும் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ. 800 விலைகளில் விற்பனையாகின்றன.

Related posts

9 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடியவர்களுக்கு விளக்கமறியல்

videodeepam

கச்சதீவை மீட்டால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? – தமிழகத் தலைவர்கள் பதில் கூற வேண்டும்

videodeepam

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி, கிளிநொச்சியில் கவனயீர்ப்பு !!!

videodeepam