deepamnews
இலங்கை

நல்லூர் ஆலய சூழல் வீதிகள் மாலையில் ஒரு மணி நேரம் மூடப்படும்!

நல்லூர் கந்தசுவாமி கோவில் கந்தஷஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நல்லைகந்தன் வெளி வீதியுலா வரும் வேளையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மாலை 5.00 மணி தொடக்கம் 6.00 மணி வரையிலும், சூரன்போர் திருவிழாவான 30ஆம் திகதி மதியம் 12 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையிலும்

31ஆம் திகதி மாலை 5 மணி தொடக்கம் 6.00 மணி வரையும் நல்லூர் ஆலய சுற்றாடலில் பக்த்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாகனம்கள் உள்நுழைய முடியாதவாறு பாதைகள் மூடப்பட்டிருக்கும்.

இந் நேரங்களில் மாத்திரம் வாகனங்கள் ஆலயச் சுற்றாடலினைத் தவிர்த்து வழமையான மாற்றுப் பாதைகளூடாக பயணிக்க முடியும் என்றும் மாநகர முதல்வர் அறிவித்துள்ளர்.

Related posts

மன்னம்பிட்டி கோர விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி.

videodeepam

உடுவிலில் 36போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

videodeepam

சுமந்திரன், சாணக்கியனை பின்தொடரும் புலனாய்வாளர்கள்

videodeepam