deepamnews
இலங்கை

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் அதிகரிப்பு –  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதன்படி, தற்போது 415 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் டீசல் நேற்று  நள்ளிரவு முதல் 430 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், தற்போது 340 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் நேற்று நள்ளிரவு முதல் 365 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

Related posts

இலங்கையில் முதலீடு செய்ய தயாராகின்றது அதானி குழுமம்?

videodeepam

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எவ்வித பயனுமில்லை – கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தெரிவிப்பு

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின்  உதவியுடனோ, இல்லாமலோ நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

videodeepam