deepamnews
இலங்கை

சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என்கிறது லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலைச்சூத்திரத்திற்கு அமைய, மாதாந்தம் 05 ஆம் திகதி சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.

விலைச் சூத்திரத்திற்கிணங்க, எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற போதிலும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதை கருத்திற்கெண்டு, விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.

அதற்கமைய, தற்போது காணப்படும் விலையிலேயே இந்த மாதத்திலும் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படவுள்ளது.

Related posts

ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வரி: அதிகரிக்கவுள்ள விலைகள்.

videodeepam

சிவநேசத்துரை சந்திரகாந்தன் மீது குற்றம்சாட்டும் சாணக்கியன் – நாடாளுமன்றத்தில் வாக்குவாதம்

videodeepam

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம்

videodeepam