deepamnews
இலங்கை

அதிகளவு போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் யாழ்ப்பாணத்தில் மரணம்

யாழ்ப்பாணத்தில், அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றும் ஒருவர் மரணத்தை தழுவியுள்ளார்.

பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே நேற்று அதிகாலை அதிகளவு போதைப் பொருளை எடுத்துக் கொண்டதால் உயிரிழந்தார் என்று இளவாலை பொலிசார் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்னரே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் பயன்படுத்தியதனால் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக் கொண்டமையே காரணம் என்று மருத்துவ பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கூலிக்காக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி பதவி விலகியமை குறித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கருத்து !

videodeepam

இலங்கைக்கு கடன் நீடிப்பு -சீனா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது

videodeepam

பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்

videodeepam