deepamnews
இலங்கை

தேவைப்பட்டால் உண்மை கண்டறியும் பொறிமுறைக்கு புதிய சட்டம்

அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்காக, உள்நாட்டு உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிறுவுவதற்கான செயல்முறையை அரசாங்கம் தற்போது ஆய்வு செய்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக, தென்னாபிரிக்கா, பொலிவியா, அர்ஜென்டினா மற்றும் சிலி போன்ற நாடுகளில் உள்ள மாதிரிகள் ஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவைப்பட்டால், இதற்காக நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்காக, உள்நாட்டு உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிறுவுவதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

புலம்பெயர் இலங்கையர்களின் ஒத்துழைப்புகளை பெறுவதற்கான அலுவலகத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

videodeepam

இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான 3ஆம் கட்ட வர்த்தக பேச்சுவார்த்தை இன்று

videodeepam

மீனவர் பிரச்சினை – கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா

videodeepam