deepamnews
இலங்கை

20 நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாவில் நிறைவேறியது தீர்மானம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பாக அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்ட, A/HRC/51 தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏழு அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா சமர்ப்பித்த இந்த தீர்மானம் மீது ஜெனிவா நேரப்படி நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாக்கெடுப்பில், 20 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

ஏழு நாடுகள் மட்டுமே தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளன.

ஏனைய 20 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.

ஆர்ஜென்ரீனா, ஆர்மீனியா, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹொண்டுராஸ், லிதுவேனியா, லக்சம்பர்க், மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்சிகோ, மொன்ரெனீக்ரோ, நெதர்லாந்து, பராகுவே, போலந்து, தென் கொரியா, உக்ரைன், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், ஆதரவாக வாக்களித்துள்ளன.

இலங்கைக்கு ஆதரவாக, பொலிவியா, சீனா, கியூபா, எரித்ரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுவேலா ஆகிய ஏழு நாடுகள், தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

பெனின், பிரேசில், கமரூன், ஐவரிகோஸ்ட், காபோன், கம்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கசகஸ்தான், லிபியா, மலேசியா, மொரிட்டானியா, நமீபியா, நேபாளம், கட்டார், செனகல், சோமாலியா, சூடான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 20 நாடுகள் தீர்மானத்தின் போது நடுநிலை வகித்துள்ளன.

Related posts

ஊழலுக்கு துணைபோகும் அரச ஊழியர்களுக்கு எனது ஆட்சியில் தண்டனை – சஜித்

videodeepam

பண்டிகைக் கால எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

videodeepam

வியட்நாம் முகாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது

videodeepam