deepamnews
இலங்கை

சர்வதேசம் சிறிலங்காவை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது – மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தல்

அரசாங்கத்தின் ஒருசில செயற்பாடுகளினால் சர்வதேசம் சிறிலங்காவை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,  வெளிவிவகார கொள்கை நிச்சயம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் சிறப்பு உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேசம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக பேசப்பட்டு சிறிலங்காவை சர்வதேச நாடுகள் புறக்கணிக்கும் நிலை காணப்பட்டது.

2015ஆம் ஆண்டு மக்களாணையுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து சர்வதேசத்தின் ஒத்துழைப்பையும்,நன்மதிப்பையும் பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். நல்லாட்சி அரசாங்கம் சர்தேசத்தின் மத்தியில் நன்மதிப்பை பெற்றது.

கடந்த இரண்டரை வருட காலத்திற்குள் சிறிலங்காவின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து சர்வதேசம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.

பொருளாதார பாதிப்புக்கான காரணத்தை சர்வதேசம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

சிறிலங்காவின் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பில் புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த பிரேரணைக்கு 20 நாடுகள் ஆதரவாகவும்,7 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளதுடன்,20 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பெரும்பாலான நட்பு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாமல் நடுநிலை வகித்துள்ளமை தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஜப்பான்,இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானம் சிறிலங்காவின் தற்போதைய பொருளாதார மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

சர்வதேசத்தை பகைத்துக் கொண்டு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து ஒருபோதும் மீண்டெழ முடியாது. ஆகவே வெளிவிவகார கொள்கை கட்டாயம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டார்.

Related posts

கொழும்பின் பல பகுதிகளில் மின் துண்டிப்பு.

videodeepam

228 கிலோ கேரளக் கஞ்சாவுடன் சந்தேகநபரை மடக்கிப் பிடித்த வட்டுக்கோட்டை மக்கள்!

videodeepam

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு காரணமாக சில விலைகள் மற்றும் கட்டணங்கள் அதிகரிக்கும் சாத்தியம்

videodeepam