deepamnews
இலங்கை

விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குமாறு கோரிக்கை

“அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனநாயக போராளிகள் கட்சியினர் அங்கு பாஜகவின் முக்கியஸ்தர் ஒருவரை சந்தித்தபோது விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குமாறு கோரிக்கை விடுத்ததாக” அக் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (19.10.2022) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“அண்மையில் ஜனநாயக போராளிகள் கட்சிக்கு இந்தியா செல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டியது.

அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் டில்லியில் பாஜகவின் முக்கியஸ்தர் ஒருவரை சந்தித்தபோது பல்வேறுபட்ட கோரிக்கையினை நாங்கள் முன் வைத்திருந்தோம்.

அந்த கோரிக்கைகள் அவர்களால் செவி சாய்க்கப்பட்டதோடு அதற்கு தீர்வுகள் வழங்கப்படும் என நம்புகின்றோம்.

மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும் என தெரிவித்திருந்தோம்.

தொல்லியல் திணைக்களத்தினால் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தின் பெயரால் தொடர்ச்சியாக பிரச்சினைகளை ஏற்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக கிழக்கு பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் தமிழர்களின் காணிகளை அபகரித்து திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமை நிறுத்த வேண்டும்.

தேர்தல் ஜனநாயக வழிமுறைகளை ஏற்று விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும் என கோரிக்கையினை நாம் வைத்தோம்.

குறிப்பாக தென்னாசிய பிராந்தியத்தில் முக்கிய வல்லரசான இந்தியா விடுதலைப் புலிகளின் தடை நீக்கப்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம்.

அத்தோடு தமிழர்களுக்கான ஒரு சமஷ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

87 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையிலே கொண்டுவரப்பட்ட 13 வது திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்தியா 13 ஐ நடைமுறைப்படுத்தக் கோரி ஐ. நா சபையில் வலியுறுத்தியது போல இங்கே அது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கையினை நாங்கள் விடுத்திருக்கின்றோம்” என்றார்

Related posts

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பு.

videodeepam

அடுத்த வருட இறுதியில் பணவீக்கம் 5 சதவீதமாக குறையும் – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு

videodeepam

இந்தியாவின் மத்தியஸ்துடனேயே தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேசவேண்டும் – கோவிந்தன் கருணாகரம் தெரிவிப்பு

videodeepam