deepamnews
சர்வதேசம்

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம் நடைமுறை

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பிராந்தியங்களில் இராணுவ சட்டம் நடைமுறைப்படுத்துவதாக புடின் தெரிவித்துள்ளார்.

சிறப்பு இராணுவ நடவடிக்கை என கூறி உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி 8 மாதங்கள் ஆகின்றது. ஆனாலும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டு இருக்கின்றது.

இந்த போரில் உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை சமீபத்தில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.

இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட அந்த 4 பிராந்தியங்களையும் ரஷ்யாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் இராணுவம் கடுமையாக போராடி வருகின்றது.

இந்த நிலையில் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்களிலும் ரஷ்ய அதிபர் புடின் இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இராணுவ சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து புதின் குறிப்பிடவில்லை. அதே சமயம் இந்த உத்தரவு இன்று (வியாழக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.

Related posts

கிரைமியா பாலத்தில் பாரஊர்தியில் குண்டை வெடிக்கச் செய்து தாக்குதல்

videodeepam

கூரைத் தகடு மோசடியில் சிக்கிய உகாண்டா அமைச்சருக்கு சிறைத்தண்டனை

videodeepam

வளி மாசடைதலினால் ஐரோப்பாவில் வருடாந்தம் 1200 சிறார்கள் உயிரிழப்பு

videodeepam