deepamnews
இலங்கை

நாட்டில் மழை மேலும் அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

நாட்டை அண்மித்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக இலங்கையின் வடக்கு கடற்கரையை அண்மித்துள்ள தமிழகப் பகுதியை நோக்கி நகரக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

Related posts

ஜனாதிபதி செயலகத்தின் முன் பறக்கவிடப்பட்ட நந்திக் கொடிகள்!

videodeepam

மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களை விற்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது – சரத்பொன்சேகா குற்றச்சாட்டு

videodeepam

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

videodeepam