deepamnews
இலங்கை

வடமாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை!

வடமாகாணம், வடமேற்கு மாகாணம் மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளில் கனமழையுடனான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் வடமேற்கு திசையில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக இலங்கையின் வடக்கு கடற்கரையை ஒட்டி தமிழக பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

எனவே, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.

பிற இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே பொதுமக்கள் இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கடவுச்சீட்டு விநியோகம் இன்று மீள ஆரம்பம் –  குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு

videodeepam

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை எதிர்வரும் 25ஆம் திகதி – மனோ கணேசன் தெரிவிப்பு

videodeepam

அரச வேலை வாய்ப்பில் வடக்கில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை – வெளி மாகாணம் தொடர்பில் பேசப்படவில்லை – ஆளுநர் மறுப்பு,

videodeepam