deepamnews
சர்வதேசம்

பாகிஸ்தான் சிற்றூர்தி விபத்தில் 11 குழந்தைகள் உள்லிட்ட  20 பேர் பலி

தெற்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற வீதி விபத்து சம்பவம் ஒன்றில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 11 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த குழந்தைகள் 2 இற்கும் 8 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிற்றூர்தி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

Related posts

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி 11 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள் – மீட்புப் பணிகள் தொடரும்

videodeepam

கனடாவில் கடும் தொழிலாளர் பற்றாக்குறை -ஐந்து இலட்சம் பேரை உள்வாங்க திட்டம்

videodeepam

உலக சாதனை படைத்த வெங்காயம்.

videodeepam