deepamnews
இலங்கை

முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டவர்களுக்கு வணக்கம் செலுத்த அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் கார்த்திகை 27 சுடர் ஏற்றிவணக்கம் செலுத்த வருமாறு முள்ளிவாய்க்கால் பிரதேச மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் நேற்று முள்ளிவாய்க்கால் பிரதேச மக்களால் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வு வெகு சிறப்பாக நினைவிற்கொள்ளப்படவுள்ளது அதற்கான தயார்படுத்தலில் பிரதேச மக்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்

 முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் முள்ளிவாய்க்கால் கிராம மக்களால் சிரமதான முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாளினை நினைவில் கொள்ள தயாராக உள்ளனர்.

இதற்காக முள்ளிவாய்க்கால் பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் உற்றோர்கள் அனைவரும் வருகை தந்து சுடரேற்றி மாவீரரை நினைவில் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மாவட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புகளை பாதுக்க காணி பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும் – ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேன் தெரிவிப்பு

videodeepam

சஜித்துக்கு  எதிரான மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க நீதிமன்றம் கால அவகாசம்

videodeepam

நெடுந்தீவு படுகொலையுடன் கடற்படைக்கும் இராணுவத்துக்கும்  தொடர்பு – ஆராய வேண்டும் என்கிறார் சிறிதரன்

videodeepam