deepamnews
இந்தியா

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை  ஆளுநர்தான் தட்டிக்கேட்க வேண்டும் ரவியை சந்தித்த இபிஎஸ் கோரிக்கை

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துள்ளது என்றும், திமுகவை ஆளுநர்தான் தட்டிக் கேட்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று  நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை, தமிழக அரசில் நடைபெறும் வரும் ஊழல், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை தொடர்பான மனுவை எடப்பாடி பழனிசாமி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, “திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. இதுகுறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். காவல் துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. கோவை சம்பவத்தை தமிழக உளவுத் துறை சரியாக கையாளவில்லை. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கை காவல் துறை முறையாக விசாரணை செய்யவில்லை என்று தெரிவித்தார்.

Related posts

ஊழலை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும் –  ஜி 20 நாடுகளிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்.

videodeepam

இலங்கை அரசால் இந்த ஆண்டில் மட்டும் 74 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

videodeepam

இந்தியாவின் மணிப்பூரில் ஊரடங்கு – வன்முறைகள் அதிகரிப்பு,   கண்டவுடன் சுட உத்தரவு

videodeepam