deepamnews
இலங்கை

டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணம் குறையாது – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது

இதன்படி, ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் புதிய விலை 420 ரூபாவாகும்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு அமைய லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஏனைய எரிபொருட்களின் விலை மாற்றமின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டீசல் விலை குறைப்பு தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன, அது பேருந்து கட்டணங்களில் தாக்கம் செலுத்தக் கூடிய அளவில் இல்லை என குறிப்பிட்டார்.

ஒரு லீற்றர் டீசலின் விலை 35 முதல் 40 ரூபாவினால் குறைக்கப்பட்டால் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

புதிதாக அமையவுள்ள மதுபான நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

videodeepam

யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம் – சிறுவன் படுகாயம்

videodeepam

கூலித் தொழிலாளியின் மகள் முல்லைத்தீவில் முதலிடம்!

videodeepam