deepamnews
இலங்கை

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமாக இந்தியா செல்ல முயன்ற 5 பேர் கைது

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(18) தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

-இவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர்.

-இவர்கள் பேசாலை,வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

-குறித்த 5 பேரும் விசாரணைகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18) மாலை தலைமன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

-இதன் போது 18 வயதிற்கு மேற்பட்ட 4 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு,16 வயது சிறுமியை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை – 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

videodeepam

வடக்கு, கிழக்கில் விகாரைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீக்க வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

videodeepam

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

videodeepam