deepamnews
இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நுவரெலியாவுக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) நுவரெலியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியை இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.

இதேவேளை, இன்று நுவரெலியா மாவட்ட நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நுவரெலியா மாவட்டத்தில் பட்டிப்பொல – பொரலந்தவுக்கும் இடையில் கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உலக முடிவைப் பார்வையிடும் வகையில், இந்த கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நுவரெலியாவில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காரைநகரில் இரண்டரை கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

videodeepam

நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்காக  மீண்டும் ஹர்ஷ டி சில்வாவின் பெயர் – ஐக்கிய மக்கள் சக்தி பரிந்துரை

videodeepam

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் – வீதிகள் பல மூடப்படுகின்றன

videodeepam