deepamnews
இலங்கை

நாடளாவிய ரீதியில் விலங்குகள் மற்றும் இறைச்சியைக் கொண்டு செல்ல மீண்டும் அனுமதி

நாடளாவிய ரீதியில் விலங்குகள் மற்றும் இறைச்சியைக் கொண்டு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 8 மற்றும் 9 ஆகிய இரு தினங்களில் கால்கடைகள் உயிரிழந்தமைக்கு நோய்த்தொற்று  காரணமில்லையெனவும் குளிரான காலநிலையே காரணமெனவும் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இதற்கான அனுமதியை மீள வழங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரத்து 800 வரையான மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்தன.

இந்த விலங்குகள் உயிரிழந்தமை தொடர்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் மேற்கொண்ட பரிசோதனையில் அதிக குளிர் காரணமாகவே அவை உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

Related posts

வடக்கு, கிழக்கில் இறந்த கால்நடைகளுக்கு நட்டஈடு -விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை

videodeepam

பெற்றோலிய விநியோகத்தை விரிவுபடுத்துவதற்கு வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

videodeepam