deepamnews
இலங்கை

சீனாவில் பரவி வரும் புதிய ஒமிக்ரோன் தொற்று தொடர்பில் இலங்கையிலும் எச்சரிக்கை

சீனாவில் பரவி வரும் புதிய ஒமிக்ரோன் தொற்று தொடர்பில் இலங்கையிலும் அவதானம் செலுத்தப்படவேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

புதிய ஒமிக்ரோன் மாறுபாடுகளினால் பாதிக்கப்பட்ட நான்கு நோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனுடன் எதிர்காலத்தில் மீண்டும் முகக் கவசம் பாவனையை கட்டாயமாக்கும் யோசனை ஒன்றும் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாட்டிற்கு வரும் வெளிநாட்டினரை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கருத்தும் உள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென சுகாதார தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த கொரோனா காலத்தில், இலங்கையில் பதிவாகிய முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான நபர் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர் எனவும், அந்த அனுபவங்களை இம்முறை நிலைமையை தணிக்க பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

videodeepam

சாதாரண தரப் பரீட்சை குறித்து பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!!!

videodeepam

யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் மீண்டும் பொறுப்பேற்பு

videodeepam