deepamnews
இலங்கை

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி – தொண்டமான் நகர் பகுதியில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பு அலுவலகம் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதை கண்டித்து இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வாயில் கறுப்பு பட்டிகளை அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 28ஆம் திகதி பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் கிளிநொச்சி காரியாலயம் உடைத்து பொருட்கள், ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன.

இதனைக் கண்டித்தும், களவில் ஈடுபடுபவர்கள் பாரபட்சம் இன்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகத்தின் முன்பாக கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பொது அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

தேடுதல் நடவடிக்கையின் போது பொலிஸார் மீது தாக்குதல்

videodeepam

இலங்கை பெண்களை மனித கடத்தல் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் ஓமானிய தூதரக முன்னாள் அதிகாரி கைது

videodeepam

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இன்று இலங்கைக்கு வருகிறார்

videodeepam