deepamnews
சர்வதேசம்

தென் ஆபிரிக்காவில் எரிபொருள் வாகனம் வெடித்ததால் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு

தென் ஆபிரிக்காவில் எரிபொருள் வாகனம் ஒன்று வெடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள்  தெரிவித்தள்ளனர். 

போக்ஸ்பேர்க் நகரில், கடந்த சனிக்கிழமை திரவ பெற்றோலிய வாயு  ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று பாலமொன்றின் அடியில் சிக்கிக் கொண்டதால், வாயு கசிவு ஏற்பட்டு வெடித்தது. இதனால் 10 பேர் உடனடியாக கொல்லப்பட்டனர். 

இந்நிலையில், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது என  தென் ஆபிரிக்க சுகாதார அமைச்சு நேற்று  தெரிவித்துள்ளது. காயமடைந்த பலர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. 

பாலத்தின் அடியில் சிக்கிய வாகனம் வெடிப்பதற்கு முன்னர் அதை பார்வையிடச் சென்றவர்களும் பலியானோரில் அடங்கியுள்ளனர். சுகாதார ஊழியர்கள் 11 பேரும் உயிரிழந்துள்ளனர் மேற்படி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

விளாடிமிர் புட்டினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்  பிடியாணை

videodeepam

கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்

videodeepam

இந்தோனேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள 180 க்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள்

videodeepam