deepamnews
இலங்கை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு 17ஆம் திகதியில்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது கூட்டணியாக போட்டியிடுவதா என்பது தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடனான கலந்துரயாடல் நேற்று கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் இடம்பெற்றது.

ஒவ்வொரு மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள வேட்பாளர்கள் தங்கள் போட்டியிட உள்ள எல்லைக்கு உட்பட்ட வட்டாரங்களில் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக மாவட்ட பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

இந்தநிலையில், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் குழு, வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான குழு மற்றும் பிரச்சார குழு என மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பிள்ளையானின் வாகன தொடரணி விபத்து – குடும்பஸ்தர் படுகாயம்  

videodeepam

ஜி 7 நாடுகளின் தலைவர்கள் இலங்கை தொடர்பில் கூட்டறிக்கை

videodeepam

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பு

videodeepam