கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் உயிரிழந்துள்ளார்.
நிட்சிங்கம் நிபோஜன், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – தெஹிவளை பிரதேசத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.