deepamnews
இலங்கை

நிலக்கரி கொள்வனவிற்காக இம்மாதம் 20.2 பில்லியன் ரூபா தேவை

நிலக்கரி கொள்வனவிற்காக இம்மாதம் 20.2 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.

நிலக்கரி தொகையை ஏற்றிய 03 கப்பல்கள் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளன.

குறித்த 03 கப்பல்களில் ஒரு கப்பலிலிருந்து நிலக்கரியை இறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக
ஷெஹான் சுமனசேகர குறிப்பிட்டார்.

ஏனைய 02 கப்பல்களுக்கும் செலுத்த வேண்டிய கட்டணம் 6.4 பில்லியன் ரூபாவாகும்.

எனினும், அதற்கான பணம் இதுவரை கிடைக்கவில்லை.

Related posts

முல்லைத்தீவில் 9A எடுத்த மாணவன் தற்கொலை

videodeepam

இலங்கைக்கு மிக அவசரமான நிதி நிவாரணம் தேவைப்படுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் தெரிவிப்பு

videodeepam

இலங்கையில் பத்தில் நான்கு குடும்பங்கள் போதிய உணவுகளை உட்கொள்வதில்லை

videodeepam