deepamnews
இலங்கை

விபத்தில் உயிரிழந்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு இன்று அஞ்சலி !

விபத்தில் உயிரிழந்த யாழ்.மாநகர சபை உறுப்பினர் மூத்த சட்டத்தரணி மு.றெமீடியஸ்க்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாநகர சபை கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. மேலும் மறைந்த மு.றெமீடியஸ்க்கு யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தினர்.

யாழ்.மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ் கடந்த 7ஆம் திகதி சிறுப்பிட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பொது விபத்துக்குள்ளானார்.

படுகாயத்தோடு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

யாழ். போதனா மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை அகற்ற புதிய நடைமுறை

videodeepam

மீண்டும் முகக்கவசம் அணியுமாறு மக்களிடம் கோரிக்கை

videodeepam

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழைய அனுமதி மறுப்பு

videodeepam