deepamnews
இலங்கை

மார்ச் 09 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த  முடியாது – பின்னர் புதிய திகதி அறிவிக்கப்படும் என்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி அறிவிக்கப்படுமெனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.

மேற்று நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு ரீதியாக தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையுடன் திறைசேரியிடமிருந்து தேவையான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் சபாநாயகரிடம் அறிக்கையிடவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

லிட்ரோ விலை தொடர்பில் மகிழ்ச்சித் தகவல்!

videodeepam

இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் பரிசு அறிவிப்பு

videodeepam

நாடளாவிய ரீதியில் விலங்குகள் மற்றும் இறைச்சியைக் கொண்டு செல்ல மீண்டும் அனுமதி

videodeepam