அரச சேவையில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்காக நடத்தப்படும் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி 341 நிலையங்களில் நடைபெறவுள்ளது.
பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு உரிய அனுமதிச் சீட்டுகளை அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இத்தேர்வின் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.