deepamnews
இந்தியா

நீரை காட்டிலும் இரத்தம் பருமனானது – இலங்கை, இந்திய உறவு குறித்து எஸ்.ஜெய்சங்கர் கருத்து  

நீரை காட்டிலும் இரத்தம் பருமனானது. இது போன்றே இலங்கையும் இந்தியாவின் உறவு உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எனவே இக்கட்டான நிலையிலும் இந்தியா, இலங்கையுடன் இணைந்து செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின்கீழ் இந்தியா செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டார்.

இதேவேளை கடினமான தருணங்களை கடந்து வரும்போது இலங்கையின் உண்மையான நண்பர் யார் என்பதே முக்கியம் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவும் பங்கேற்றார்.

Related posts

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பில் ஓ. பன்னீர்செல்வம்  தொடர்ந்துள்ள வழக்கில் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு இன்று

videodeepam

செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கம் – ஆளுநர் அதிரடி உத்தரவு!

videodeepam

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் மைத்ரேயன் – எடப்பாடி அதிரடி நடவடிக்கை

videodeepam