deepamnews
இந்தியா

நீரை காட்டிலும் இரத்தம் பருமனானது – இலங்கை, இந்திய உறவு குறித்து எஸ்.ஜெய்சங்கர் கருத்து  

நீரை காட்டிலும் இரத்தம் பருமனானது. இது போன்றே இலங்கையும் இந்தியாவின் உறவு உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எனவே இக்கட்டான நிலையிலும் இந்தியா, இலங்கையுடன் இணைந்து செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின்கீழ் இந்தியா செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர் இந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டார்.

இதேவேளை கடினமான தருணங்களை கடந்து வரும்போது இலங்கையின் உண்மையான நண்பர் யார் என்பதே முக்கியம் என்றும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவும் பங்கேற்றார்.

Related posts

ராமர் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றில் மேன்முறையீடு

videodeepam

இந்தியாவின் புதிய நாடாளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது

videodeepam

நளினி உள்பட 6 பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்

videodeepam