deepamnews
இலங்கை

ஏப்ரல் 25 தேர்தல் நடத்தப்படாது – வர்த்தமானி அறிவிப்பு

ஏப்ரல் 25ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.

கருவூலம் நிதி ஒதுக்கீடு செய்த பின்னரோ அல்லது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்புக்குப் பின்னரோ தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் கூட்டப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைத்ததுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் பொருளாதார நெருக்கடி – சீனா வெளியிட்ட அறிவிப்பு

videodeepam

காலிமுகத்திடலில் தடைவிதிக்க தீர்மானித்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் வஜிர அபேவர்த்தன

videodeepam

மகாவலித் திட்டத்தில் 10 இலட்சம் காணிகள் ; தமிழர்கள் எவருக்கும் இல்லை பறிப்பதே திட்டம் – முன்னாள் துணைவேந்தர்

videodeepam