deepamnews
சர்வதேசம்

ரஷ்யாவின் முக்கிய நகரில் வெடிகுண்டு மீட்பு; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!

ரஷ்யாவின் பெல்கோரோட் நகரில் வெடிகுண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வெடிபொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைனுடனான நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நகரத்தின் மீது ரஷ்ய போர் விமானம் தற்செயலாக வெடிகுண்டு வீசி விபத்தினை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விபத்து இடம்பெற்ற இரண்டு நாட்களில் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதற்கும் போர் விமான சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.  

Related posts

நியூசிலாந்து – ஒக்லாந்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 3 பேர் பலி

videodeepam

இஸ்ரேலில் வரலாறு காணாத மக்கள் போராட்டம் – பிரதமரின் அதிரடி திட்டம்

videodeepam

பிரித்தானியா ஒரு தசாப்த கால பொருளாதார வளர்ச்சியை இழக்க நேரிடும் என எச்சரிக்கை  

videodeepam