யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று காலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/IMG-20230825-WA0074-1024x768.jpg)
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்ற சட்டத்தரணிகள் போராட்டம் மேற்கொண்டுவரும் நிலையில் அதற்கு ஆதரவாக இந்த போராட்டம் இடம்பெற்றது.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/IMG-20230825-WA0082-1024x768.jpg)
இதன்போது கறுப்புத் துணிகளால் வாய்களை மூடியவாறு சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கு வழக்கு விசாரணைகள் 1.30 மணித்தியாலங்கள் தாமதமாகவே ஆரம்பமாகின.