மறைந்த முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 96 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்று மாலை பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் இடம்பெற்றது.
இதன்பொழுது அமிர்தலிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/IMG-20230826-WA0186-1024x768.jpg)
தொடர்ச்சியாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் அமிர்தலிங்கத்தின் நினைவு பேருரை முன்னெடுக்கப்பட்டது.
![](https://deepamnews.lk/wp-content/uploads/2023/08/IMG-20230826-WA0182-1024x768.jpg)
இதன்பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இலங்கை தமிழரசு கட்சியின் பொருளாளர் கனகசாபபதி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான துரைலிங்கம், ஜெயந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் மகளீர் அணி செயற்பாட்டாளர் பரமானந்தவள்ளி , பண்ணாகம் அண்ணா கலைமன்றத்தினர், பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.