deepamnews
இலங்கை

இந்த நாட்டு மக்கள் மத்தியில் ரணில் ராஜபக்சவினருக்கு இடம் கிடையாது.

இவர்களால் எந்த தேர்தல் நடத்தினாலும் வெற்றி பெற முடியாது. இவர்கள் தோல்வி அடைவது தவிர்க்க முடியாது என யாழ்ப்பாண மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கலந்துகொண்டு தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

விசேடமாக ரணில் விக்கிரமசிங்க அவர்களை எடுத்துக் கொண்டால் , ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஒருவருடம் பூர்த்தி ஆகி உள்ளது. நாட்டு வளங்களை விற்கின்ற மக்களை மிகவும் துன்பத்திற்கு உள்ளாக்கின்ற ஒரு ஜனாதிபதியாகவே இவர் உள்ளார். மேலும் மேலும் வேலை சுமைகளை ஏற்றுகின்ற ஒரு ஜனாதிபதியாகவே இவர் உள்ளார்.

இந்த அரசாங்கம் நாட்டின் வளங்களை ஏனைய நாடுகளுக்கு விற்பனை செய்கின்றது.

அந்நிய நாடான இந்தியா எமது வழங்களை சுரண்டுகின்றது. மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதி எவ்வாறு இவ்வாறு நாட்டு வளங்களை விற்பனை செய்ய முடியும் என அவர் கேள்வி எழுப்பினர்

Related posts

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் கீழே வீழ்ந்து உயிரிழப்பு!

videodeepam

பயங்கரவாத எதிர்ப்பு  சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது தாமதம் – விஜேதாச ராஜபக்ஷ

videodeepam

தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

videodeepam