இவர்களால் எந்த தேர்தல் நடத்தினாலும் வெற்றி பெற முடியாது. இவர்கள் தோல்வி அடைவது தவிர்க்க முடியாது என யாழ்ப்பாண மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கலந்துகொண்டு தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசேடமாக ரணில் விக்கிரமசிங்க அவர்களை எடுத்துக் கொண்டால் , ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஒருவருடம் பூர்த்தி ஆகி உள்ளது. நாட்டு வளங்களை விற்கின்ற மக்களை மிகவும் துன்பத்திற்கு உள்ளாக்கின்ற ஒரு ஜனாதிபதியாகவே இவர் உள்ளார். மேலும் மேலும் வேலை சுமைகளை ஏற்றுகின்ற ஒரு ஜனாதிபதியாகவே இவர் உள்ளார்.
இந்த அரசாங்கம் நாட்டின் வளங்களை ஏனைய நாடுகளுக்கு விற்பனை செய்கின்றது.
அந்நிய நாடான இந்தியா எமது வழங்களை சுரண்டுகின்றது. மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதி எவ்வாறு இவ்வாறு நாட்டு வளங்களை விற்பனை செய்ய முடியும் என அவர் கேள்வி எழுப்பினர்