deepamnews
சர்வதேசம்

காசாவை நோக்கி முன்னேறும் இஸ்ரேல் படைகள் – 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் தொடங்கிய தினத்தில் இருந்து இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன் நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கி இதுவரையான நாட்களில் 9,061 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அந்த நாட்டு சுகாதாரத் துறையை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் போர் மூண்டது. இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 3 வாரங்களில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துச் செல்கின்றது.

உயிரிழந்துள்ள 9 ஆயிரத்திற்கு மேற்பட்டோரில் 18 வயதிற்கு உட்பட்ட 3 ஆயிரத்து 760 சிறுவர்களும் உள்ளடங்குவர்.

இதேவேளை, இந்த யுத்தத்தில் இஸ்ரேல் தரப்பில் இருந்து 1,400 பேர் உயிரிழந்துள்ளனர்.

போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 100 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் ரபா எல்லை வழியாக வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் இஸ்ரேல் தரைவழிப்படைகள் காசாவை நோக்கி மேலும் முன்னேறியுள்ளன என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

Related posts

பெருவின் முன்னாள் ஜனாதிபதி பதவி நீக்கம் – உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை

videodeepam

பொஸ்பரஸ் வெடிமருந்துகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் – உக்ரைன் குற்றச்சாட்டு

videodeepam

பாகிஸ்தானில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டுக்கு மாறாக தேர்தலை  நடத்த அந்நாட்டு ஜனாதிபதி தீர்மானம்

videodeepam