deepamnews
இலங்கை

வரவு – செலவு திட்டத்தில் ஜனாதிபதி முன் வைத்துள்ள பல யோசனைகளை நடைமுறைப்படுத்தமுடியுமா என்பதே எமது கேள்வி -ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு.

வரவு – செலவு திட்டத்தில் ஜனாதிபதி பல யோசனைகளை முன் வைத்துள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதே எமது கேள்வியாக உள்ளது எனஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்பி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நேற்று ஜனாதிபதி முன்வைத்து உரையாற்றியதையடுத்து அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட யோசனைகளில்  90 வீதமானவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை நாம் அறிவோம்.

அதேபோன்று அரசாங்கத்தினால் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அதனை நடைமுறைப்படுத்தாமல் வேறு எதையும் முன்னெடுக்க முடியாது.

வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி சிறந்த விடயங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். எனினும் அரசாங்கத்தினால் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா? என்பதே கேள்வியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவே இலங்கைக்கு அதிகம் உதவியது வழங்கியுள்ளது என்கிறார் அலி சப்ரி

videodeepam

மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை  

videodeepam

தேர்தலுக்கான நிதி தடையின்றி வழங்கப்படும் – திறைசேரி அதிகாரிகள் தெரிவிப்பு

videodeepam