deepamnews
இந்தியா

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது! – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு

தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரை புரண்டு ஓடுவதாலும் குளங்கள் நிரம்பி உடைந்ததால் வெளியேறிய தண்ணீராலும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல கிராமங்கள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

குளங்களில் இருந்து வெளியேறிய தண்ணீர் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான இடங்களில் தேங்கி நிற்பதால் அதனை அகற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ள போதிலும், இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தநிலையில், இந்தியாவில் இதற்கு முன்னர் தேசிய பேரிடர் என்ற ஒன்று இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதால், தமிழ் நாட்டு வெள்ள அனர்த்தத்தையும் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தென்மாவட்ட மழை, வெள்ளப் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டில்லியில் தமிழக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் 50 சென்ரி மீற்றர் மழை என்பது அண்ணளவாக ஒரு வருடத்துக்கு பெய்ய வேண்டிய மழை அளவு. அது ஒரேநாளில் பெய்ய மழைநீர் தேங்கி மக்கள் தவிக்கும் நிலை உருவானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

குஜராத்தில் தொங்கு பாலம் அறுந்துவிழுந்து  விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை  140 ஆக உயர்வு

videodeepam

தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது: இதுதான் திமுக அரசின் சாதனை என்கிறார் சி.வி. சண்முகம்

videodeepam

அதிமுகவின் 2,646 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,501 பேர் தென்னரசுக்கு ஆதரவு

videodeepam