deepamnews
சர்வதேசம்

உக்ரைனின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்திய ரஷ்யா -10 பேர் உயிரிழப்பு

கடந்த ஆண்டு தொடங்கிய உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

இந்த போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியோடு உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஏழு கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும் உள்ளூர் நேரப்படி நேற்று உக்ரைன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைனின் மையப்பகுதியில் இருக்கும் கிரைவி ரிஹ் என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஐந்து மாடி கட்டிடத்தை தாக்கியதாகவும், இதில் அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தாகவும் டினிபிரோ பெட்ரோவிஸ்க் பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும், மீட்கும்பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

காசாவை நோக்கி முன்னேறும் இஸ்ரேல் படைகள் – 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி!

videodeepam

22 வருடங்களில் இல்லாத அளவு வட்டி வீதத்தை உயர்த்திய அமெரிக்க மத்திய வங்கி.

videodeepam

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு

videodeepam